Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியது.
இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஊராட்சி உழுது பள்ளியின் அருகில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சுத்தம் செய்ய ஜேசிபி எந்திரம் மூலம் எடுக்கப்பட்ட குப்பைகள் பள்ளியின் அருகில் கொட்டப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதை தாண்டிதான் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உண்டாகி இருக்கிறது. இதனால் மாணவ மாணவிகள் தவறி விழும ஆபத்தான நிலையில் உள்ளது.
மேலும் துர்நாற்றம் வீசுவதால் படிப்பின் போது சிரமம் ஏற்படுவதாக பெற்றோர்கள் வேதனை அடைகின்றனர். இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளியின் அருகில் உள்ள குப்பைகளை அகற்றி, கால்வாய் மேல் உள்ள கல்லை போட்டு மூட வேண்டும் என பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.